சக்கரம் சுற்றுதடா . . . குழவி ஒன்று வந்தது குதி குதித்து நடந்தது மழலை பேசி சிறுமி ஆகி மளமளன்னு வளர்ந்தது. அகவை ஈரெட் டானது அழகு கூட லானது முகத்தில் காதல் கொப்பு ளித்து முளை விடுக்க லானது. காம தேவன் பார்வையில் காளை வந்து கூடலில் சாமம் எந்த நாளும் மோகச் சங்க மங்கள் ஆச்சுது குழந்தைக் கின்று குட்டியாய் குழந்தை ஒன்று பிறந்த்து. பழங்க தைகள் மீட்டும் மீட்டும் பையத் திரும்பு [...]