பா வி

அரசு செலவில்
அரசு அலுவலகத்தில்
அரசு மொழி பற்றி ஆய்வு எனும் போர்வையில் வந்து
அல்ட்டாப் செய்து மஞ்சக் குளிக்கும்
ஆறு மக்கள் பிரதிநிதிகளின் மனமகிழ் சுற்றுலா . . .!
இது அக்கினி தீர்த்தம்
மனிதன் செய்யும்
இருபத்தேழு வகைப் பாவங்களும்
இதில் நீராடத் தீரும் . . .!
இராமேச்சுவரத்தில் விளக்கினார் வழிகாட்டி.
அதாவது ரோடு போட்டதில்
கமிஷன் வாங்கிய பாவம் தீர . . .
என எமலோகத்தில் உறுமினான் எமதர்மன் !
யார் அங்கே,
இவர்களுக்கு ஆறாய் பொங்கும் 6
கொதிக்கும் தார்க்
கொப்பரைகள் வையுங்கள்
குளிப்பாட்டினால்தான் பாவம் தீரும் . . .!
ஆறாவது கொப்பரை யாருக்கோ ?
- கேட்டான் கிங்கரன்
தப்புத் தப்பாய் வழிசொன்ன
வழிகாட்டிக்கு . . .!
எனக் கர்ஜித்தான் நீதி தேவன் . . .

அருமை